For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்ப்பாண தமிழ் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்

By Staff
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்:

இலங்கை தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான யாழ்ப்பாண தமிழ் பல்கலைக்கழகத்ததை இழுத்துமூடியிருக்கிறது ராணுவம்.

கடந்த ஒரு மாத காலமாகவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த1,000க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஊழியர்களும் "பொங்கு தமிழ்" என்ற இயக்கத்தை ஆரம்பித்து,தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின்போர் நிறுத்தம், அரசு-புலிகளுக்கிடையே பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுதான் இந்தஇயக்கத்தின் முக்கியக் கொள்கைகள். குரலும் கொடுத்தார்கள்.

பல்ககைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் பங்கேற்ற போராட்டம் என்பதால், சூடு கொஞ்சம் அதிகமாகவேஇருந்தது. மேலும், இலங்கை ராணுவத்தினரின் கொடுமைகள் பற்றியும், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நார்வே தூதுக் குழுவினருக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பத் தொடங்கினார்கள்.

இதற்கு அப்புறம்தான் நிலைமை சீரியஸானது. இதையடுத்து, இலங்கை ராணுவத்தினரை அனுப்பி நிலைமையைக்கவனிக்கச் சொன்னது இலங்கை அரசு. அவர்கள்தான் "எள் என்றால் எண்ணெயாக" நிற்பார்களே. இப்போதும்அப்படித்தான்...

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கச் செயலாளர்கிருஷ்ணசுவாமி திவ்யனை அள்ளிக்கொண்டு போய்விட்டது இலங்கை ராணுவம். அவரைக் கைது செய்ததோடுமட்டுமல்லாமல், வழக்கம்போல சித்திரவதை செய்யவும் ஆரம்பித்தனர் ராணுவத்தினர்.

கொதித்துப் போன "பொங்கு தமிழ்" இயக்கத்தினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதையடுத்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தை இழுத்து மூடிவிட்டனர் இலங்கை ராணுவத்தினர்.

ஆனாலும் "பொங்கு தமிழ்" இயக்கத்தினர் மனம் கலங்கி விடவில்லை. தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துநடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X