For Daily Alerts
Just In
சிறுமியின் உயிர் பறித்த விஷவண்டுகள்
கரூர்:
விளையாடும் போது விஷவண்டுகள் கடித்ததால் ஒரு சிறுமி இறந்தார். மற்றும் பலர் காயமடைந்தனர்.
கருர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தேக்கதலை கோவில்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.அவரது மகள் சுதா என்ற 5 வயது சிறுமி.
இதனால் சிதறிய வண்டுகள் சுதாவை மொய்த்துக் கடித்துக் குதற ஆரம்பித்தன. வலியால் துடித்துக் கதறிய சுதாவின்சத்தத்தைக் கேட்டவர்கள் விரைந்து வந்து காப்பாற்ற முயன்றனர்.
வண்டுக் கூட்டம் அவர்களையும் தாக்கியதில் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் வலியால் துடித்த அந்த இளம் பிஞ்சு அங்கேயே இறந்தாள்.
உடனே இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் தீயணைைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்து வண்டுகளைஅகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]