ஜெயலலிதாவின் சம்பந்தி!
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிவாஜியின் வீட்டில் தான் பெண்எடுத்தார்.
இந்த திருமணத்திற்கு ரூ 100 கோடிக்கு மேல் செலவு செய்யப் பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,கொஞ்சகாலத்திலேயே சுதாகரன் ஜெயலலிதாவுக்கு வேண்டாதவர் ஆனார். சுதாகரன் இனி என் வலர்ப்பு மகன்அல்ல என அறிவித்தார் ஜெயலலிதா.
இம்முறை முதல்வரான ஜெயலலிதா சுதாகரனை சில வாரங்களுக்கு முன் போதை மருந்து வழக்கில் சிறையில்தள்ளினார். இப்போதும் சிறையில் தான் இருக்கிறார்.
இந்நிலையில் சத்தியலட்சுமி சிவாஜி வீட்டிற்கு வந்து விட்டார். சிவாஜி தனது செல்லப் பேத்தியின் நிலைமைநினைத்து மிக வருத்தமாக இருப்பாராம்.
மேலும் சரியாக சாப்பிடாமலிருந்ததாலும், ஏற்கனவே அவருக்கிருந்த உடல் பிரச்சனைகளாலும் அவரதுஉடல்நிலை மேலும் மோசமானது.
இந்நிலையில் சிவாஜி குடும்பத்திற்கும், சசிகலா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும், சிவாஜி இறந்து ஒரு நாள் ஆகியும் ஜெயலலிதா இதுவரை சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு தான் வந்துமலர் வளையம் வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் சார்பிலும் தனது இரங்கலை அவர் சிவாஜி குடும்பத்தினரிடம்தெரிவித்தார்.