மாஜி வளர்ப்பு மகன் மனைவியை புறக்கணித்த ஜெ.
சென்னை:
மறைந்த நடிகர் சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா சிவாஜியின்பேத்தியும், தனது முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனின் மனைவியயுமான சத்தியலட்சுமியை புறக்கணித்தார்.
அதை அடுத்து நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தபின் சுதாகரன் இனி என் வளர்ப்புமகன் இல்லை என்று ஜெயலலிதாஅறிவித்தார்.
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின் சுதாகரன் அவரது மன்ற செயலாளரைகொலை செய்ய முயன்றதாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு காலமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை சிவாஜியின்இல்லத்திற்கு சென்றார்.
சிவாஜியின் உடலுக்கு அருகே அமர்ந்திருந்த சத்தியலட்சுமி, தாத்தாமருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த பின் என் கணவர் பிரச்சனை பற்றி நல்லதீர்வு காண்கிறேன் என்று கூறி இருந்தார்.
இப்போது அவர் இல்லையே எனக்கு யார் இனி ஆதரவு என கூறி கதறி அழுதுகொண்டிருந்தார்.
சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயலலிதா சிவாஜியின் உடலுக்கு அருகே இருந்தசிவாஜியின் மனைவியின் கமலம்மாவின் கைகளைப் பிடித்து அவருக்கு ஆறுதல்சொன்னார்.ஆனால் அவர் சத்தியலட்சுமியை முழுவதுமாக புறக்கணித்தார். அவர்இருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.
சுதாகரனுக்கு சிவாஜியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குக் கூட பரோல்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.