தந்தை உடலை பார்க்க ராம்குமார் மறுப்பு
சென்னை:
தந்தையின் உயிரற்ற உடலை பார்க்க திறன் இல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே சோகமாக அமர்ந்திருந்தார் நடிகர்திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். உறவினர்களும்,.திரை உலக பிரமுகர்களும் அவருக்கு வீட்டிற்குள்சென்று ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தனது தந்தையின் உயிரற்ற உடலை பார்க்க திறன் இல்லாத அவரது மூத்த மகன் ராம்குமார்வீட்டிற்குள்ளேயே கண்ணீர் பொங்க சோகமாக அமர்ந்திருந்தார்.
ராம்குமாருக்கு தந்தை மேல் அளவிட முடியாத பாசம் உண்டு. தந்தை எங்கு சென்றாலும் அவர் நினைவாகவேஇருப்பார் ராம்குமார். சிவாஜிக்கும் ராம்குமார் மேல் அதிகமான பாசம் உண்டு.
தன் உயிருக்கு உயிரான தந்தை இறந்து போனது ராம்குமாரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனது சோகத்தைகட்டுபடுத்த முடியாமல் தன் தந்தையின் உயிரற்ற உடலை காணமுடியாம் வீட்டின் அறைக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தார் ராம்குமார்.
சிவாஜியின் உடல் அருகே சிவாஜியின் இரண்டாவது மகனும், நடிகருமான பிரபு மட்டும் நின்று கொண்டு தன்உறவினர்களிடமும், திரை உலக பிரமுகர்களிடமும் பேசிக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தார்.
சோகமாக வீட்டிற்குள் இருந்த ராம்குமாரை வீட்டிற்குள் சென்று சந்தித்து அவரது உறவினர்களும், திரை உலகபிரமுகர்களும் ஆறுதல் கூறினர்.