For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

புலிகள்-ராணுவம் சண்டை நடந்தபோது இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியப்பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இத் தகவலைத் தெரிவித்தனர். சென்னை செல்வதற்காகவும்இந்தியாவின் பிற நகர்களுக்கு செல்லவும் விமானம் ஏற பல இந்தியப் பயணிகள் இலங்கை சர்வதேச விமானநிலையத்தில் அதிகாலையில் காத்திருந்தனர்.

அதே போல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது தான் இந்த சண்டை தொடங்கியது.

இந்தப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பான வழிகள் மூலமாக அதிகாரிகள் வெளியேற்றினர். அவர்கள்அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எந்த விமானமும் இந்த விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இலங்கைக்குள் நுழைந்த அனைத்துவிமானங்களும் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் திருப்பி விடப்பட்டன. பெரும்பாலான விமானங்கள்இந்தியாவுக்குத் தான் வந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X