For Daily Alerts
Just In
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறார் மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் தமாகாதலைவர் மூப்பனார். தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக, 19 பேர் கொண்ட ஒரு குழுவை மூப்பனார்திங்கள்கிழமை உருவாக்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபருடன் முடிவடைவதை அடுத்து, விரைவில்உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து 22 சீட்டுகளைத் தமிழகத்தில் கைப்பற்றியுள்ளதுதமாகா. இதே உற்சாகத்துடன், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி விட்டார் மூப்பனார்.
ராஜ்யசபாவுக்கு ஒரு சீட்டை தமாகாவுக்காக ஜெயலலிதா ஒதுக்கித் தந்ததும், தமாகாவினருக்கும் மூப்பனாருக்கும்பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.
Story first published: Thursday, May 10, 2001, 5:30 [IST]