டெல்லியில் ராமதாஸ் டேரா: மத்திய அரசு கூட்டணியில் நுழைய முயற்சி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்க்க பாரதீய ஜனதா விருப்பம் காட்டவில்லை.ஆனாலும் எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட வேண்டும்என்பதற்காக டெல்லியில் டேரா போட்டியிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இது குறித்து பா.ம.க. செயற்குழுவிலும் கூடி விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்திலும்பா.ம.க.மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணைவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பா.ம.கவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்துபேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமைகாலை டெல்லி விரைந்தார்.
பா.ஜ.கவில் ஆர்வமில்லை:
ஆனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க பாரதிய ஜனதா ஆர்வம் காட்டவில்லைஎனத் தெரிகிறது. பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை சென்னைவந்திருந்தார்.
அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், பா.ம.க. மீண்டும் தேசியகூட்டணியில் இணைய வேண்டுமானால் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டசிடமும், பிரதமர் வாஜ்பாயுடனும் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
அதன் பின்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதித்துமுடிவு எடுக்கப்படும். இது தான் மரபு.
ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறிக் கொண்டுஇங்கேயே இருப்பது பயன்தராது.
மேலும் நினைத்தபோது கூட்டணியில் இருந்து விலகுவது, நினைத்துபோது மீண்டும்இணைவது என்பது போன்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.