For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூலன் தேவியை சுட்டுக் கொன்ற முகமூடிக் கும்பல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முகமூடி அணிந்து வந்த கும்பல் தான் பூலன்தேவியை சுட்டுக் கொன்றுள்ளது.

முதலில் அவரது காரை மாருதி கார் வழிமறித்ததாகவும் அதிலிருந்து இறங்கிய கும்பல் சுட்டதாகவும் செய்திகள்வந்தன.

ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த கேசவ் செளகான் என்ற கூலித் தொழிலாளி கூறுகையில்,

சுமார் 1.45 மணிக்கு பூலன்தேவி தனது வீட்டருகே காரிலிருந்து கீழே இறங்கினார். தனது கேட்டருகே நடந்துசென்றபோது கருப்பு நிற மாருதி வேன் அங்கு வந்து நின்றது. அதிலிருந்து குதித்த 4 பேர் துப்பாக்கியால்பூலன்தேவியை சுட்டனர்.

அவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். பூலன் தேவியின் பாதுகாவலர் அங்குமிங்கும் ஓடினார்.துப்பாக்கியால் சுட்ட கும்பலை நோக்கி அவரும் திருப்பிச் சுட்டார். இதையடுத்து அவரையும் அந்தக் கும்பல்சுட்டது. இதில் அவரது வயிற்றிலும் கையில் குண்டுகள் பாயந்தன.

நான் எதிரில் இருந்த கார் ஷெட்டில் சாப்பிட சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

பூலன் தேவியின் தலையில் குண்டுகள் பாய்ந்தன. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்தக்கும்பல் மாருதி வேனிலேயே ஏறித் தப்பிவிட்டது.

அவர்கள் சென்றபின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலன்தேவியிடம் ஓடினேன். அவர் மயங்கிக் கிடந்தார்.அவரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினேன். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு பூலன்தேவியின் கணவர் உதய்சிங்கும் அங்கு ஓடிவந்தார்.

இருவரும் பூலன்தேவியை ராம்மனோகர் லோகியா மருத்துவமைனக்குக் கொண்டு சென்றோம்.

இவ்வாறு கேசவ் செளகான் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X