For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்ந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் மற்றும்முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்ட்டுஇருந்த சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, பொன்முடி, முன்னாள்தலைமைச் செயவாளர் நம்பியார், கவுன்சிலர்கள் ஸ்ரீதர், ஜெகதீசன், இன்ஜினியர் சேதுராமன் உள்ளிட்ட 7 பேரைசென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சென்ற 6ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இவர்கள் 7 பேரும் திங்கள்கிழமை தோறும் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இவர்கள் திங்கள்கிழமைகளில் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி இவர்களுக்கு விதித்த நிபந்தனையை தளர்த்திஉத்தரவிட்டார். இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளில் ஒன்றான திங்கள்கிழமை நீதிபதி முன்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி அசோக்குமார் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X