For Daily Alerts
Just In
ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்ந்தது
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் மற்றும்முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.
இவர்கள் 7 பேரும் திங்கள்கிழமை தோறும் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இவர்கள் திங்கள்கிழமைகளில் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி இவர்களுக்கு விதித்த நிபந்தனையை தளர்த்திஉத்தரவிட்டார். இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளில் ஒன்றான திங்கள்கிழமை நீதிபதி முன்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி அசோக்குமார் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]