மிர்ஸாபூர் கொண்டு செல்லப்படுகிறது பூலனின் உடல்
டெல்லி:
புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட பூலன்தேவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம்மிர்ஸாபூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூலன்தேவியின் உடல் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வாரணாசிக்குக் கொண்டு செல்லப்பட்டுஅங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக் மூலம் மிர்ஸாபூருக்குக் கொண்டு செல்லப்படும்.
முன்னதாக பூலன்தேவியின் உடலுக்கு பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடிகட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அனைத்துக்கட்சி எம்.பிக்களும் பூலன்தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் பந்த்:
பூலன்தேவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்தில் பந்த் நடத்தசமாஜ்வாடிக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அம் மாநிலத்தில் பலம் வாய்ந்த இக் கட்சியின் பந்த்துக்கு ஆதரவுஇருக்கும் என்றே தெரிகிறது.
அங்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. பா.ஜ.கவின் ராஜ்நாத் சிங் முதல்வராகஉள்ளார்.