For Daily Alerts
Just In
சென்னையில் "ஈவ் டீசிங்": 5 பேர் கைது
சென்னை:
சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவிகளை, அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து கேலி செய்து வந்த 5பேரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
அலுவலகத்தின் முன் அமர்ந்துகொண்டு தெருவில் போகிற கல்லூரி-பள்ளி மாணவிகளைக் கேலி செய்வதுஇவர்களது வழக்கம். மேலும், எல்லை மீறி அந்த மாணவிகளுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து வந்தார்கள்.
தொடர்ந்து, அந்தப் புகைப்படங்களை அந்தப் பெண்களிடமே காட்டி மிரட்டியும், கேலி செய்தும் வந்தார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]