For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடன்பிறந்த சகோதரிகள் மீது ஆசிட்வீசிய வாலிபர்!

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர், அதைஆசிரியரிடம் கூறிய தனது சொந்த சகோதரிகள் இருவர் மீதும் ஆசிட் ஊற்றிவிட்டுஓடிவிட்டார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த அந்த இளைஞர் பள்ளி மாணவிகளை சனிக்கிழமை கேலிசெய்தார். இதைப் பார்த்துவிட்ட அந்த வாலிபரின் 2 சகோதரிகள், தங்களதுசகோதரனின் செயல் குறித்து ஆசிரியரிடம் கூறினர்.

இதையடுத்து அந்த ஆசிரியர் மாணவிகளை கேலி செய்த அந்த இளைஞரை கூப்பிட்டிகண்டித்தார். இதனால் அந்த இளைஞர் தனது உடன் பிறந்த சகோதரிகள் மீதுகோபமடைந்தார்.

கோபத்துடன் இருந்த அவர் தனது சகோதரிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தபோது அவர்கள் இருவர் மீதும் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அந்த இரு மாணவிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X