For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன நல காப்பகத்தின் உரிமையாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஏர்வாடி:

25 மனநோயாளிகள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனதையடுத்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாதுஷா மன நோயாளிகள் மையம் என்ற இந்த காப்பகத்தின் உரிமையாளர் முகைதீன், அவரது தம்பி மனைவி உள்ளிட்ட 5 பேர்தீவிபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏர்வாடி தர்ஹா பகுதியில் மொத்தம் 14 மன நோயாளிகள் காப்பகங்கள் உள்ளன. அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை.இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், அடித்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று புகார்கொடுக்கப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் இந்த காப்பகங்களைக் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்தக் காப்பகங்களில் உள்ள நோயாளிகளை இலவசமாக சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இங்கு சிகிச்சை பெற்றால்தான் குணமடைவார்கள் என்று பொதுமக்கள்கருதுவதால் அவர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை என்கிறார் மாவட்ட கலெக்டர் விஜய்குமார்.

முதல்வர் உதவி:

இதற்கிடையே, தீவிபத்தில் இறந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்குதலா ரூ. 15,000 நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000 நிதியும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இறந்தவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பது மனதைகாயப்படுத்தியுள்ளது. காயமடைந்த நோயாளிகள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே ஏர்வாடிக்கு மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா விரைந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X