ஊரை ஏமாற்றுகிறார் ஜெ.- குற்றம் சாட்டுகிறார் கருணாநிதி
சென்னை:
டி.ஜி.பி. ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பாமல் ஏதேதோ காரணம் சொல்லி முதல்வர் ஜெயலலிதாஊரை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக இருப்பவர் டி.ஜி.பி. ராஜகோபாலன். இவர் கடந்த திமுக ஆட்சியில்முக்கியமான பதவி வகித்து வந்தார்.
தந்போயை அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் திமுக ஆட்சியில் முக்கியப் பதவிகளை வகித்து வந்த பல உயர்அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிதாக வேறு அதிகாரிகளை நியமித்தது.
ராஜகோபாலனும் அவ்வாறு மாற்றப்பட்டு டம்மி பதவியான போலீஸ் பயிற்சி கல்லூரியின் இயக்குனராகநியமிக்கப்பட்டார்.
இந் நிலையில், மத்திய அரசின் கருப்புப் பூனைப்படையின் இயக்குனராக ராஜகோபாலனை மத்திய அரசுநியமித்தது. இதனால் அவரை உடனடியாக விடுவித்து மத்திய அரசுப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்குமத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய பதில்கடிதத்தில் ராஜகோபாலனின் சேவை... தமிழக அரசுக்குத் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். முன்னதாக அவர் தான் கைதுசெய்யப்பட்டபோது, போலீசார் பிடித்து இழுத்ததால் கையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிற்கான 4 நாள் சிகிச்சை முடிந்துமருத்துவமணையில் இருந்து வந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
டி.ஜி.பி. ராஜகோபாலன் விவகாரம் பற்றிப் பலமுறை நான் கூறிவிட்டேன். மத்திய அரசு கேட்டால் அதிகாரிகளைஉடனே அனுப்பி வைப்பது தான் முறை. தமிழக அரசு கேட்டவுடன், விஜயகுமார், சங்கர் உள்பட பலரை மத்தியஅரசு அனுப்பி வைக்கவில்லையா?.
அது மாதிரி ராஜகோபாலன், முத்துக்கருப்பன் உள்ளிட்ட 4 பேரையும் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.பயிற்சிக் கல்லூரி இயக்குனர் பதவி அவ்வளவு முக்ககியமான பதவியல்ல. ராஜகோபாலன் விவகாரத்தில்ஜெயலலிதா அரசு ஊரை ஏமாற்றப்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குனர் பதவி முக்கியமான பதவி இல்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, பெரியபிரச்சனையைக்ை கிளப்பும் என்று தெரிகிறது. இந்தப் பதவி முக்கியமான பதவி இல்லை என்றால் மாநில போலீஸ்டி.ஜி.பியாக இருந்த தேவாரத்தை இந்தப் பதவிக்கு திமுக அரசு ஏன் மாற்றியது என்று அவர்கள் கேள்விஎழுப்புவார்கள்.