காவலர் நேர்முகத் தேர்வு துவங்கியது
சென்னை:
தமிழக காவல்துறைக்கு புதிதாக 4,000 காவலர்கள் எடுக்கப்படுகின்றனர். இதற்கான நேர்முகத் தேர்வுதிங்கள்கிழமை தமிழகம் முழுவதிலும் துவங்கியது.
இதற்கான முதல் கட்ட எழுத்துத் தேர்வு கடந்த திமுக ஆட்சியில் நடந்தது. அதிலிருந்து 12,488 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இது தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது ஜெயலலிதா முதல்வராகியுள்ள இந்நிலையில் நேர்முகத் தேர்வு ஆரம்பித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 15தமிழக நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.
மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வில் தினசரி 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடம்நேர்முகத் தேர்வு நடக்கிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது. மொத்தமுள்ள 400காலியிடங்களுக்கு 1459 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 150 பேருக்கு திங்கள்கிழமை நேர்முகத் தேர்வுநடந்தது.
டி.ஐ.ஜி. ராஜேந்திரன் தலைமையிலான குழு இந்தத் தேர்வை நடத்துகிறது.