For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாசுடன் பேச எனக்கு தகுதி இல்லை: திருமாவளவனின் கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் நம்பத்தகுந்த கொள்கை உடையவர் அல்ல. அதனால் அவரைக்கூட்டணியில் சேர்க்கவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.


அதிமுகவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து சிலகாலம் எந்த முடிவையும் எடுக்காமலிருந்தது. அப்போதுமுதல் இன்று வரை பா.ம.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கூறிவருபவர்திருமாவளவன்.

ஆனால், பா.ம.க. தலைவர் ராமதாஸ் நேராக டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துக் கூட்டணியில்இணைந்து விட்டது. முதலில் முறையாக பா.ம.க இன்னும் கூட்டணியில் சேரவில்லை என்று சொல்லி வந்த பாரதீயஜனதா, ஒருவழியாக பா.ம.க வை இணைத்துக் கொண்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.

ஆனால், இந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் திமுக இது பற்றி இன்னும் முடிவுசெய்யாமலிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் எதிர்ப்பு.

விடுதலைச் சிறுத்தைகள் விலகினால், திமுகவுக்கு இழப்பு தான் ஏற்படும், அதே நேரத்தில் பா.ம.க.வைச் சேர்ப்பதால்பா.ம.க மட்டும்தான் லாபமடையும் என்று திமுகவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருமாவளவனுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை. இருந்தாலும் அவருடன் பேசத் தயார் என்று ராம்தாஸ்கூறியிருக்கிறார்.

நம்பிக்கை துரோகம் என்ற கொள்கை எங்களுக்கு இல்லை. ஆனால், ராம்தாஸ் நம்பத் தகுந்த கொள்கைஉடையவர் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக முதுகில் குத்தக் கூடியவர். எனவே, அவருடன் பேச நான் தகுதிஇல்லாதவன்தான்.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க வைச் சேர்க்கவே கூடாது.

இது குறித்து திமுக தான் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் வாஜ்பாய், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் ஆகியோரது முடிவைவிட, திமுக தலைவர் கருணாநிதியின் முடிவு தான் எங்களுக்கு முக்கியம்.

திமுக வின் முடிவுக்குப் பின், எங்களது முடிவை நாங்கள் அறிவிப்போம்.

மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க, அரசாணை 44யை அமல்படுத்த மாநில அரசுமுன்வர வேண்டும்.

இந்த நாட்டில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில்நடக்கும் மாநாட்டில் எடுத்துக் கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X