For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் ஒரு பெண் பலி

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ஏர்வாடி மன நலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேலும்ஒரு பெண் மன நோயாளி இறந்தார்.


ஏர்வாடி மன நலக் காப்பகத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 அப்பாவி மன நோயாளிகள்உயிருடன் கருகி இறந்தனர். தீயிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமலேயே அந்த 25 பேரும்இறந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணியம்மாள் என்ற 30 வயதுப் பெண், செவ்வாய்க்கிழமை அதிகாலைஇறந்து போனார்.

"தீ விபத்து" என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனநலக் காப்பக உரிமையாளரைத் தவிர வேறுயாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தொழில் ரீதியிலான போட்டி, பொறாமை காரணமாக யாரோ தீ வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர் என்று அந்த மனநலக் காப்பகத்தின் உரிமையாளர் பாதுஷா போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X