For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தராஞ்சலை இன்று தாக்கிய லேசான பூகம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உத்தராஞ்சல் மாநிலத்தில் வியாழக்கிழமை காலை 11.26 மணிக்கு லேசான பூகம்பம் ஏற்பட்டது,

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குஜராத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் சுமார் 25,000 பேர்கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடு, உடைமைகளை இழந்தனர்.

இதையடுத்து இந்தியாவின் பல பகுதிகளிலும் அவ்வப்போது லேசான பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரமும்குஜராத்தின் கட்ச் பகுதியில் லேசான பூகம்பம் ஏற்பட்டது. ஆனால் பொருளிழப்போ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

புதன்கிழமை, மேகலாயாவின் தலைநகர் ஷில்லாங்கிலும், அசாம் தலைநகர் கெளஹாத்தியிலும் லேசான பூகம்பம்ஏற்பட்டது.

இந்நிலையில் உத்தராஞ்சல் மாநிலத்தில் வியாழக்கிழமை லேசான பூகம்பம் ஏற்பட்டது. காலை 11.26 மணிக்குஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிக்டர் அளவு கோலில் 4.1 என்று பதிவாகி உள்ளது.

பொருளிழப்பு, உயிரிழப்பு குறித்து எந்த விதமான தகவலும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X