For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெடிகுண்டுகளுடன் நெல்லையில் 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

திருநெல்வேலியில் வெடிகுண்டுகளுடன் ஒரு ஆட்டோவில் வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பட்டி விலக்கு அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த ஆட்டோவின் டிரைவர் மணியுடன், சிவந்திபட்டியைச் சேர்ந்த குஞ்சுமணி என்பவரது மகன்பன்னீர் செல்வம் மற்றும் கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் அருணாச்சலம் ஆகிய 3இளைஞர்கள் இருந்தார்கள்.

போலீசார் தொடர்ந்து ஆட்டோவைச் சோதனை போட்டபோது, அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு, ஒரு பைப்வெடிகுண்டு மற்றும் சில அரிவாள், கத்திகள் என பயங்கரமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் அந்த ஆயுதங்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்ததுடன் ஆட்டோவில் வந்த 3 பேரையும் கைதுசெய்தனர்.

பிறகு போலீசார் விசாரித்ததில், அவர்கள் சிவந்திப்பட்டியில் உள்ள ஒருவரைக் கொலை செய்வதற்காக இந்தஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டனர்.

பிறகு புதன் கிழமை இந்த 3 பேரையும், போலீசார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு அவர்கள்காவலில் வைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X