இறந்த எம்.எல்.ஏவுக்கு இரங்கல்: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடியது. மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏவானவை. பெருமாளுக்கு இரங்கல் தெரிவித்த பின் அலுவல்கள் எதையும் கவனிக்காமல் சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. வை.பெருமாள் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவைஒத்தி வைக்கபடும் என்று சபாநாயகர் காளிமுத்து புதன்கிழமை அறிவித்திருந்த காரணத்தால் பட்ஜெட் வரும் 18ம்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்று காலை அவை கூடியதும், சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ வை.பெருமாளின் மறைவுக்குஅஞ்சலி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து வாசித்தார். இதையடுத்து அவையிலிருந்த அனைத்துஎம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அலுவல் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
2001 -2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 18ம் தேதி தமிழக நிதி அமைச்சர் பொன்னையனால் தாக்கல்செய்யப்படவுள்ளது.