For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் மாளிகை தேனீர் விருந்தில் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ரங்கராஜன் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஜெயலலிதாபங்கேற்றார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேனீர் விருந்துவழங்குவது வழக்கம். அந்த வகையில், புதன்கிழமை சென்னை ராஜ் பவனில், தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகபதவி வகிக்கும் ரங்கராஜன், தேனீர் விருந்து வழங்கினார்.

இதற்காக புதன்கிழமை மாலை ஆளுநர் ரங்கராஜன் தன் மனைவி ஹரிபிரியாவுடன் ஹைதராபாத்திலிருந்துசென்னை வந்தார். ஆளுநர், அவரது மனைவி, முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் ஆகிய 4 பேரும் இந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் சுதந்திர போராட்ட தியாகிகளும், தொழிலதிபர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் முதல்வருக்கும், ஆளுநருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதன் பின்கோரிக்கை மனுக்களை ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளித்தனர்.

இதையடுத்து விழா மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த பந்தலில் தேனீர் விருந்து நடைபெற்றது. இந்தவிழாவில் மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சி,கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். முன்னாள்தமிழக டி.ஜி.பி. வைகுந்தும் தேனீர் விருந்தில் கலந்து கொண்டார்.

இரவு 7 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேனீர் விருந்து முடிவடைந்தது. முதலில் ஆளுநர் தன் மனைவியுடன்புறப்பட்டுச் சென்றார். அவர்களை வழியனுப்பி வைத்த பின் முதல்வர் கிளம்பினர்.

நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்க முயன்ற போது, இப்போது கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டுமுதல்வர் சென்றுவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X