For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

பீகாரில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு மோதியதில், 10 பேர்கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

பீகார் மாநிலம் - ஜமுயி ரயில் நிலையத்திலிருந்து, நேற்றிரவு 7.45 மணிக்கு ஒரு பயணிகள் ரயில் சியால்டாவுக்குக்கிளம்பியது.

அப்போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென்று தடம் மாறிஇந்த தண்டவாளத்தை நோக்கி வந்தது.

இதைப் பார்த்ததும், பயணிகள் ரயிலின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள்சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தனியாகக் கழண்டு வந்து பயணிகள் ரயிலோடு பயங்கரமாக மோதின.

இவ்விபத்தில், 10 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X