For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

29 உடல்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

காட்பாடி:

வெடிவிபத்து நடந்த காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையின் இடிபாடுகளிலிருந்து இதுவரை 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுக்குச் சொந்தமான இந்தத் தொழிற்சாலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பயங்கரவெடி விபத்து ஏற்பட்டது.

பல கி.மீ. தூரத்திற்கும் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வெடிவிபத்தில் 27பேர் பலியானதாக நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்றிரவு மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இதுவரை மொத்தம் 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடிந்த கட்டடங்களைப் போல, வெடிவிபத்து நடந்த அந்தத் தொழிற்சாலை முழுவதும்இடிந்து மண்ணோடு மண்ணாகக் காணப்பட்டது.

சில வெடிகுண்டுகள் தவறுதலாகக் கீழே விழுந்ததால், இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும், உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X