For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்ட்ராவில் ரயில் மோதி 15 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜல்கோன்:

மகாராஷ்டிரா மாநிலத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த ரயில் மோதியதில் 8 பெண்கள், 5சிறுவர்-சிறுமிகள் உள்பட 15 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் ஒரு தர்காவுக்குச் சென்றுவிட்டு புஷாவல்-வார்தா பயணிகள் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.அப்போது தங்கள் வீடு இருக்கும் பகுதி வந்தவுடன் ரெயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி,இறங்கினர்.

பிறகு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மற்றொரு தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த கீதாஞ்சலிஎக்ஸ்பிரஸ் இவர்கள் அனைவரையும் மோதித் தள்ளியது.

இதில் 15 பேர் உடல்கள் துண்டுதுண்டாகச் சிதறி அதே இடத்தில் இறந்தார்கள். இவர்களில் 8 பேர் பெண்கள், 5 பேர்சிறுவர்-சிறுமிகள். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ரெயில்வே அதிகாரிகள்,மருத்துவர்கள் மற்றும் போலீசார் குழு விரைந்து சென்று மீட்பு வடவடிக்கைகளில் இறங்கினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X