For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களுக்குப் பிறகுதான் ஜெ.. கோர்ட்டில் மேலும் சில வழக்குகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை எங்களது மனுவுக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது என்று கோரி மேலும் சில மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா டான்சி வழக்கில் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.அந்த மனு எனது அப்பீல் மனுவுக்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது. எனவே சீனியாரிட்டிபடி எனதுமனுதான் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வேலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதி ரவிவர்மா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதேபோல மேலும் சில மனுக்கள் தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு வழக்குஒன்றில் தண்டனை பெற்றுள்ள கலைச்செல்வன் என்ற கைதியும், டான்சி வழக்கில் தண்டனை பெற்றஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கற்பூரபாண்டியன், சீனிவாசன் ஆகியோரும் தங்களது அப்பீல் மனுக்களை முதலில்விசாரிக்க வேண்டும் என்று கூறி மனு செய்துள்ளனர்.

தன்னை ஜாமீனில் விடக் கோரி மனுச் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தினகர், பக்தவச்சலு ஆகியோர்ரவி வர்மாவை ஜாமீனில் விட உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, ஆயுள் தண்டனைக் கைதி ரவி வர்மாஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X