பெண் சிசுக் கொலையைத் தடுக்க புதிய திட்டங்கள்
சென்னை:
தமிழ்நாட்டில் பெண்சிசுக் கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுக்க, பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரூ. 12.96 லட்சம் மதிப்பில் குழந்தை ஏற்புமையங்கள் தொடங்கப்படும்.
பெண் சிசுக் கொலைக்ைகு எதிராக தீவிர பிரசாரமும் மேற்கொள்ளப்படும்.
ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்து, பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் அந்தப்பெண் குழந்தையின் பெயரில் ரூ. 21,650 முதலீடு செய்யப்படும்.
இந்தப் பணம் 20 ஆண்டுகள் கழித்து ரூ. 50,000 ஆக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்.
அதேபோல, இரண்டு பெண் குழந்தைகள் இருந்து பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால்அக்குழந்தைகளின் பெயரில் ரூ. 16,450 முதலீடு செய்யப்பட்டு அக்குழந்தைக்குக் கிடைக்க வகை செய்யப்படும்.
இவ்வாறு அந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு விடிவு காலம் கொண்டு வரும் ஒரு திட்டமும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மஹாலில் மீண்டும் ஒலி, ஒளிக் காட்சி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒலி, ஒளிக் காட்சி நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம், தஞசாவூர் போன்ற ஊர்களிலும் அறிமுகப்படுத்தப்படும்என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.