For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்பாடி வெடிவிபத்து: யார் அந்த 28வது நபர்?

By Staff
Google Oneindia Tamil News

காட்பாடி:

காட்பாடி வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்ட 28 பேரில் 27 பேர் மட்டுமே அங்கு வேலைபார்த்தவர்கள் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து, விபத்து பற்றிய மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த 16ம் தேதி காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடிகுண்டு விபத்து, தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.பல மைல் தூரம் வரை வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

வெடிவிபத்து ஏற்பட்ட அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும்ஏதாவது குண்டு வெடிக்கலாம் என்ற அச்சத்துடன், மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்தன.

இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அன்றைய வருகைப் பதிவேட்டுக் கணக்கின்படி, 27 தொழிலாளர்கள்மட்டுமே அன்று வேலைக்கு வந்துள்ளனர்.

புதிதாக வந்த அந்த 28வது நபர் யார் என்று அதிகாரிகள் முதல் போலீசார் வரை தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். அவர் யார் என்று தெரிந்தால்தான், விபத்து காரணத்திற்கான மர்மம் விலகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

28வது நபரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. அவருடைய தலையைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.தொழிற்சாலையின் பார்வையாளர் பதிவேட்டிலும், அந்த 28வது நபரின் பெயர் இடம் பெறவில்லை என்பதும்சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

வெடிவிபத்திற்கு அந்த 28வது நபர்தான் காரணமாக இருப்பார் என்ற அடிப்படையில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X