For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

ஆந்திராவில் இன்று காலை நக்சலைட்டுகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கி, 10 போலீசார்பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

குண்டூர் மாவட்டம் ரேமிடிசிர்லா என்ற கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப்பணிகளுக்காக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 8 போலீசார் ஒரு ஜீப்பில் அங்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இவ்விபத்தில், அந்தவாகனத்தில் சென்ற டிரைவர் உள்பட 10 போலீசாரும் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.

இதே விபத்தில், அடையாளம் தெரியாத வேறு 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகளின் கண்ணி வெடிக்கு, இதுவரை ஏராளமானபோலீசார் பலியாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X