For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை இந்தியா- இலங்கை 2---வது டெஸ்ட்

By Staff
Google Oneindia Tamil News

கண்டி:

இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி நாளைதொடங்குகிறது.

வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால் சச்சின் டெண்டுல்கர் இந்தபோட்டிகளில் பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்கு பலவீனம் என்று கூறினால்அது மிகையாகது.

இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் பலவீனம் சேர்க்கும் வகையில் இந்தியஅணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் காயம் காரணமாக இந்தியா திரும்பிவிட்டார்.

ஸ்ரீநாத்துக்கு பதிலாக வேறுயாரையும் அனுப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் கூறிவிட்ட காரணத்தால், இந்திய அணியில் இடம் ரிசர்வ் ஆகசேர்க்கப்பட்டிருந்த ஹர்விந்தர் சிங் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்துக்கு பதிலாகவிளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. இந்த போட்டியில் வென்றால்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன்செய்ய முடியும். முதல் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோற்றது.

அப்போதுதான் 3வது இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றவாய்ப்பு உண்டு.

இந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றால், ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில்வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் இலங்கை 2-0 என்ற புள்ளிக் கணக்கில்தொடரை வென்றுவிடும்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதன்கிழமை தொடங்கும் 2வது டெஸ்ட்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கைஅணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X