For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானி-ராஜகோபாலன் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜகோபாலன் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனைநடத்தினார்.

திமுக ஆட்சியில் தமிழக டி.ஜி.பியாக இருந்த ராஜகோபாலன் ஜெயலலிதா ஆட்சியில்போலீஸ் பயிற்சிக் கல்லூரித் தலைவராக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்.

அத்வானிக்கு நெருக்கமானவரான அவரை மத்திய அரசு தேசிய பாதுகாப்புப்படையின் (கருப்புப் பூனைப் படை) தலைவராக நியமித்தது. அவரை உடனடியாகமத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அவைர அனுப்ப மறுத்த ஜெயலலிதா மத்திய அரசு நெருக்குதல்கொடுத்ததால், சென்ற வாரம் ராஜகோபாலனை மாநில அரசுப் பணியிலிருந்துவிடுவித்தார்.

இதையடுத்து டெல்லி சென்ற ராஜகோபாலன் தேசிய பாதுகாப்பு படையின் தலைவராகதிங்கள்கிழமை காலை பொறுப்பேற்றார்.

அதன் பின் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராஜகோபாலன் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் ராஜகோபாலன் கூறுகையில், தேசிய பாதுகாப்பு படையைமேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து உயர்அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.

ராஜகோபாலன் தேசிய பாதுகாப்பு படை தலைவராக பொறுப்பேற்றவுடன் தேசியபாதுகாப்பு படை அதிகாரிகள் ராஜகோபாலனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X