நகை மட்டும் போதும்... நூதன திருடன் பிடிபட்டான்
சென்னை:
ஓடும் பஸ்களில் நகைகளை மட்டும் திருடும் நூதன திருடனை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து திருடர்களைப்பிடிக்க ஆணையர் ஆணையிட்டார். இன்ஸ்பெக்டர் சுப்பையாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாறு வேடத்தில் சைதாப்பேட்டை பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
சைதை பஸ் நிலையம் அருகில் அவர்கள் ரோந்தில் இருந்தபோது ஒரு நபர் சந்தேகம் அளிக்கும் விதத்தில் நடமாடிக்கொண்டிருந்தார். அவரை அணுகிய போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
உடனடியாக அவரை அள்ளிக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த "கவனிப்பில்"அந்த நபர் தனது தகவல்களைக் கூறினார்.
இவரது பெயர் பிரகாஷ் என்ற சலீம். பஸ்களில் நகைகளைத் திருடுவது இவரது தொழிலாம். அதுவும் நகைகளைமட்டுமே திருடுவது இவரது வழக்கம். பணத்தைத் திருடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும் கூட திருட மாட்டாராம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அணிந்திருக்கும் தங்க நகைகளை திருடிக் கொண்டு நழுவி விடுவாராம்.அவரிடமிருந்து ரூ.50,000 மதிப்புள்ள நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.