தொண்டர்களை தேடும் தொண்டர் காங்கிரஸ்
சென்னை:
தொண்டர் காங்கிரஸ் கட்சி தனது கட்சிக்குத் தொண்டர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குமரி அனந்தன். பிறகு கா.கா.தே.கா. அதாவது காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்றகட்சியை ஆரம்பித்து நடத்தினார். அதன் பிறகு மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்பதவியை வகித்தார்.
அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவித்தார். அங்கிருந்து தப்பி புதிதாக ஒரு கட்சியையும் ஆரம்பித்துதொண்டர் காங்கிரஸ் எனவும் பெயர் சூட்டினார்.
தொண்டர் காங்கிரஸ் கண்ட சிறந்த சொற்பொழிவாளரான குமரி அனந்தன் தற்போது கட்சியைப் பலப்படுத்தும் பணியில்இறங்கியுள்ளார். முதல் கட்டமாக கட்சியின் பெயரில் மட்டுமே உள்ள தொண்டரை கட்சியிலும் இடம் பெறச் செய்யும் வகையில்தொண்டர் சேர்ப்புப் பணியைத் தொடங்கியுள்ளார்.
கட்சியின் உறுப்பினர் சேர்ப்புக்கான முதல் பாரத்தை குமரி அனந்தன் வெளியிட அதை தென் சென்னை மாவட்ட தொண்டர்காங்கிரஸ் தலைவர் ஐசக் ராஜ் பெற்றுக் கொண்டார்.
அடுத்த மாதத்திற்குள் உறுப்பினர் சேர்ப்புப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்சி நிர்வாகிகள்தேர்வு நடைபெறும்.