For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை-கொல்லம் ரயிலில் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை-கொல்லம் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து, அந்த ரயில் 2 மணி நேரம்தாமதமாகச் சென்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மதுரையிலிருந்து கொல்லத்திற்குச் செல்லும் ரயில் வழக்கம்போல 11 மணிக்குப்புறப்பட்டது.

ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, மதுரை ரயில் நிலையப் பொது மேலாளருக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. தொலைபேசியில் பேசிய மர்ம ஆசாமி, கொல்லத்திற்குச் சென்று கொண்டிருக்கும் ரயிலில் குண்டுவைத்திருப்பதாகக் கூறினான்.

இதையடுத்து, மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த400 பயணிகளும் உடனடியாக இறக்கப்பட்டனர்.

விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும், மோப்ப நாய் உதவியுடன் ரயில் முழுக்கச்சோதனையிட்டனர்.

ஆனால், அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்ததொலைபேசித் தகவவல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இதனால், கொல்லத்திற்குச் செல்ல வேண்டிய அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாகச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X