For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் விரைவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழகத்தில் விரைவில்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறினார்.

சட்டசபையில் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது மொத்தம் 222 பொறியியல் கல்லூரிகளும், 205 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. இவற்றில்சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

62,934 மாணவ-மாணவிகள் பொறியியல் கல்லூரிகளிலும், 47,324 பேர் பாலிடெக்னிக்குகளிலும்சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை என்றநிலைதான் தற்போது நிலவுகிறது.

அதனால், பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளிலும் இன்னும் அதிக அளவு பயிற்சி பெற்ற,தகுதியான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், விரைவில் தொடங்கப்படவிருக்கும் "தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" மூலமாக, அனைத்துப் பொறியியல்கல்லூரிகளும் பாலிடெக்னிக்குகளும் ஒரே கூரையின் கீழ் செயல்படவுள்ளன. இதனால், வளர்ந்து வரும்அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, இக்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வகங்களும் நவீன மயமாக்கப்படும்.மேலும், தொழிற்சாலைகளுக்கும் இத்தகைய கல்வி நிறுவனங்களக்கும் இடையே உள்ள தொடர்பைஅதிகப்படுத்தவும் "தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" உதவும் என்றார் தம்பிதுரை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X