For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 100 கோடி அறக்கட்டளை சொத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மூப்பனாரின் மறைவையடுத்து, "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை"யின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

வறுமையால் வாடும் காங்கிரஸ் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காகவும், கல்வி மேம்பாட்டுக்குப்பாடுபடுவதற்காகவும் இந்த அறக்கட்டளை 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. காமராஜரும், "ஹிந்து"பத்திரிகையின் கஸ்தூரி சீனிவாசனும் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினர்.

தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் திடல், காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் உள்பட பல இடங்கள்"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை"க்குச் சொந்தமானதாகும்.

ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர் அரங்கம், அறக்கட்டளைக்கு ரூ.5.50 கோடி வரை கடனைஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் பேசுகிற விதத்தில் பேசி, அந்தக் கடனைத் தீர்ப்பதற்குஆலோசனைகள் பல வழங்கியவர் மூப்பனார்தான் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் கூறின.

ஆரம்பத்தில், இந்த அறக்கட்டளையில் 7 பேர் வரை அறங்காவலர்களாக இருந்தனர். பின்னர் படிப்படியாக இதன்எண்ணிக்கை குறைந்து, தற்போது 2 பேர் மட்டுமே அறங்காவலர்களாக இருந்தனர்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைத் தன்னிடம் வைத்துள்ள இந்த அறக்கட்டளையை மூப்பனாரும்ராமசாமி உடையாரும்தான் அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.

தற்போது, மூப்பனாரையும் இழந்துவிட்ட நிலையில், ஒரே ஒருவரை மட்டும் அறங்காவலராகக் கொண்டு,தத்தளித்துக் கொண்டிருக்கிறது "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை".

வாழப்பாடியின் வழக்கு

"2 பேர் மட்டுமே அறங்காவர்களாக இருப்பதை அறக்கட்டளையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட விதிகளின்படி,காலியாக இருக்கும் 5 அறங்காவலர் பதவிகளையும் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரி தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு பொதுநல வழக்கை சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்தார்.

நிலுவையில் உள்ள அந்த வழக்கு முடிந்த பிறகு, அல்லது, தமாகா-காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் எடுக்கும் முடிவைப்பொறுத்துதான் அறக்கட்டளையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X