சந்திரிகாவுக்கு சிங்கள கட்சி ஆதரவு... தப்பியது அரசு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி)கட்சியின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதால் அக் கட்சி சந்திரிகா அரசை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இதனால்சந்திரிகா அரசுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கியுள்ளது.
இலங்கை அதிபருக்கும், ஜே.வி.பி. தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரிகள் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிபர் குமாரதுங்காவுக்கும், ஜே.வி.பி. தலைவர்களுக்கும் இடையே நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதுஜே.வி.பி. விடுத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள அதிபர் சம்மத்தித்தார்.
இதையடுத்து சந்திரிகா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என்று ஜே.வி.பி.தலைவர்கள் தெரிவித்தனர். இந்த ஆதரவு 1 வருட காலத்திற்கு நீடிக்கும் என்றும்தெரிவித்தனர்.
இது குறித்து அரசு எந்த விதமான அதிகார பூர்வமான அறிவிப்பையும்வெளியிடவில்லை. ஆனாலும்ஜே.வி.பியின் முக்கிய கோரிக்கைகளை மக்கள்கூட்டணி ஏற்றுக் கொள்கிறது என்ற கடிதத்தை பிரதமர் ரத்ன ஸ்ரீ விக்ரமநாயகேஜே.வி.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறினர்.
சந்திரிகா குறிப்பிட்டபடி வரும் 7ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும்,அடுத்த மாதம் 18ம் தேதி எடுப்பதாக இருந்த பொதுஜன வாக்கெடுப்பு முடிவையும்அதிபர் திரும்ப பெறுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள தீவிரவாத கட்சி தான் இந்த ஜே.வி.பி.