For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் நீர்மட்டம்: தமிழக அதிகாரிகளும் ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

தமிழக வருவாய்த்துறை முதன்மை ஆணையாளர் சுகனேஷ்வர் மற்றும் காவிரி ஆற்றின் தலைமைப் பொறியாளர்பொன்னுசாமி ஆகியோர் மேட்டூர் அணையில் நீர்மட்டத்தை ஆய்வு செய்தார்கள்.

முன்னதாக மத்திய அரசின் காவிரி நதி நீர்வள ஆய்வுக் குழுவினர் வியாழக்கிழமை மேட்டூர் அணையைபார்வையிட்டுச் சென்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களின் சாகுபடிக்கு போதிய அளவு நீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி கூட்டப்படும்என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் காவிரி நீர்வள ஆய்வுக் குழுவினர் காவிரி படுகை பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய வியாழக்கிழமை தமிழகம் வந்தனர்.

அவர்கள் மேட்டூர் அணைக்கு சென்று, அணையின் நீர் இருப்பு குறித்து நேரில் கண்டறிந்தனர்.

தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரி மோகன கிருஷ்ணன் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம் பற்றியும்காவிரி நீர் இல்லாதததால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்தார்.

இவர்களுடைய அறிக்கைதான், செப்டம்பர் 6ம் தேதி நடைபெறவிருக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில்முக்கியப் பங்கு வகிக்கும்.

இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் தமிழக வருவாய்த்துறை மற்றும் நிலத்துறையின் முதன்மை ஆணையாளர்சுகனேஷ்வர் மற்றும் காவிரி ஆற்றின் தலைமைப் பொறியாளர் பொன்னுசாமி ஆகியோர் மேட்டூர் நீர்மட்டத்தைஆய்வு செய்தார்கள்.

இவர்கள் மேட்டூர் அணைக்குள் இறங்கி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் நிலை, நீர்வரத்து, திறந்து விடப்படும் நீரின்அளவு மற்றும் அனையின் தற்போதைய நீர்மட்டம் போன்றவற்றை ஆய்வு செய்தார்கள்.

பிறகு சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டக் கலெக்டர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் அபூர்வா ஆகியோருடன்ஆலோசனை செய்தார்கள்.

வரும் 6 ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அனையின் நிலைகுறித்து தமிழக அரசு எடுத்துரைக்க இந்தக் குழுவின் அறிக்கைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X