டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை
கொழும்பு:
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்கள் வித்தியாசத்தில்வென்றதன் மூலம், இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில், இன்று காலை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, மேலும் 82 ரன்களை மட்டுமே சேர்த்து, அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
இன்றைய ஆட்டத்தில், பந்து வீச்சாளரான ஜாகீர் கான் மட்டும் பேட்டிங்கில் பிரகாசித்தார். 2 சிக்ஸர் மற்றும் 5பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 45 ரன்களை விளாசித் தள்ளினார்.
இருப்பினும், மற்ற ஆட்டக்காரர்கள் சோபிக்காமல் போனதால், 299 ரன்களை இந்திய அணி தொட்டபோது,அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதன் மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வென்று, டெஸ்ட்தொடரையும் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த இலங்கையின்முரளிதரனுக்கு "ஆட்ட நாயகன்" விருது கிடைத்தது.
மேலும், 3 டெஸ்ட்டுகளிலும் அருமையாக விளையாடி, 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், "ஆட்டத் தொடர்நாயகன்" விருதையும் முரளிதரன் தட்டிச் சென்றார்.