காசியில் கனமழை: 16 பேர் பலி
வாரணாசி:
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முதல் பெய்து வரும் பலத்த மழைக்கு 16 பேர் பலியானார்கள்.
இந்த கனமழையில் நனைந்து வீடுகள் இடிந்ததாலும், மின்னல் தாக்கியும் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த மழையில் வாரணாசி மற்றும் ஆஸம்கார் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர் பலியானார்கள். மேலும்சோன்பத்ராவில் 3 பேரும், ஜான்பூரில் 2 பேரும், பாதோய் மாவட்டத்தில் ஒருவரும் மழைக்குப் பலியாகி உள்ளனர்.
இந்தப் பகுதிகளில் இரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் மின்இணைப்புத் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. தொலைத் தொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டு அப்பகுதிமக்கள் தனிமைப்பட்டுள்ளனர்.
மேலும் இரயில் பாதையில் கடுமையான கோளாறு ஏற்பட்டிருப்பதால், ஹவுரா- லக்னோ ரயில் வேறு வழியாகத்திருப்பி விடப்பட்டுள்ளதாக இயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.