For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியா: ரயில்கள் மோதி 42 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா:

இந்தோனேஷியாவில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதிலல் 42 பேர்கொல்லப்பட்டனர். 30 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவின் கடலோர நகரம் சைர்பான். இங்கு உள்ளது சைர்பான் ரயில்வேஸ்டேஷன். இங்கு நின்று கொண்டிருந்த சைர்பான் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஜகார்தாவிலிருந்து வந்து கொண்டிருந்தஎம்பு ஜயா என்ற ரயில் மோதியது.

சிக்னலையும் மீறி படு வேகமாக எம்பு ஜயா ரயில் மோதியதால்தான், இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில்30 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

எம்பு ஜயா ரயிலின் டிரைவர் தூங்கிவிட்டதால்தான், அவர் ரயில்வே சிக்னலை கவனிக்காமல் இந்த விபத்துஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X