For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவகோட்டை அருகே திமுக பிரமுகர் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே சீனிவாசன் என்ற திமுக பிரமுகர், 11 பேர் கொண்ட ஒரு கும்பலால் சனிக்கிழமைநள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.

தன் மகனுடன் சீனிவாசன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இந்தக் கும்பல், அந்த பைக் மேல்மோதி அவர்கள் 2 பேரையும் கீழே தள்ளியது.

பின்னர், தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தது இந்தக் கும்பல்.

இத்தாக்குதலில், சீனிவாசன் அந்த இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன், அவருடைய மகன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சீனிவாசனைத் தாக்கிய அந்த 11 பேருமே, அவருடைய உறவினர்கள்தான் என்றும், சொத்து பிரிப்பதில் ஏற்பட்டதகராறுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் போலீசார் கூறினர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் 11 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.கொலையாளிகளில் ஒரு போலீசும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X