For Daily Alerts
Just In
இலங்கை தமிழர்களுக்காக டர்பனில் ஆர்ப்பாட்டம்
டர்பன்:
நிறவெறி எதிர்ப்பு மாநாடு நடந்துவரும் டர்பன் நகரில், இலங்கை தமிழர்கள் படுகொலை செய்வதை தடுத்துநிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டின்போது, இலங்கையில் வாழும் தமிழர்கள், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைதடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். நிறவெறி எதிர்ப்பு மாநாடுநடைபெறும் மண்டபத்திற்கு வெகு அருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்படஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை பிரச்சனையில் இந்திய தூதரகமும், சர்வதேச சமுதாயமும் தலையிட்டு தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
Comments
Story first published: Monday, September 3, 2001, 5:30 [IST]