கன்னியாகுமரியில் மீண்டும் ஈவ் டீசிங்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும்திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூடி,சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழிகொடுக்கவே, அவர்கள் கலைந்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக ஈவ் டீசிங் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதே கன்னியாகுமரியில்தான், தன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக, கடந்த மாதம் 2 பெண்களின் முகத்தில்ஆசிட் வீசினான் ஒருவன். இந்தச் சம்பவம் மறக்கப்படுவதற்குள்ளாகவே, கடந்த வாரம் ஈவ் டீசிங் கொடுமைகாரணமாக அமுதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.