ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க "கமாண்டோ" படை
சென்னை:
குழியில் விழுந்த சிறுவன் இறந்து போனதன் எதிரொலியாக, ஆபத்துகளில் சிக்கியவர்களை மீட்க சென்னையில் 20பேர் கொண்ட கமாண்டோ படை அமைக்கப்படுகிறது.
சென்னை ஆடியபாதம் தெருவில், ஆழ்குழாய் அமைக்கத் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து தமிழ்மணிஎன்ற சிறுவன் 2 நாட்களுக்கு முன் மரணமடைந்தான்.
மீட்புக்குழுவினர் கடுமையாகப் போராடியும், அந்த தெரு மிகக்குறுகலானதாக இருந்ததால் சிறுவனை உயிருடன்மீட்க முடியாமல் போனது.
இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க, போர்வெல்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இது போன்ற ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக தனியாக ஒரு சிறப்புக் கமாண்டோபடை அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் இணைக் கமிஷனர் சைலேந்திர பாபு கூறியதாவது:
சென்னையில் ஆபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக 20 பேர் கொண்ட தனி கமாண்டோ படைஅமைக்கப்படுகிறது. இந்தப் படைக்குத் தலைவராக நான் செயல்படுவேன்.
இந்தப் படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எந்தவித ஆபத்துகளில் இருந்தும் பொதுமக்களைக்காப்பாற்றும் விதம் இந்தப் படை செயல்படும்.
இவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் உதவிகள் செய்வார்கள். இந்தப் படைக்கான வீரர்கள்உடனடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்சைலேந்திர பாபு.