For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் ஈவ் டீசிங் - 9 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈவ் டீசிங் தொடர்பாக ஈரோட்டில் முதல் முறையாக 9 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு-வீரப்பன் சத்திரத்தில் 6 இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைக் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

இதனால், அந்தப் பெண் தன் தந்தையிடம் இதைக்கூறி அழுதுள்ளார். உடனே அப்பெண்ணின் தந்தை போலீசில்புகார் செய்தார்.

அவருடைய புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போலீசார், மற்றொரு ஈவ் டீசிங் தொடர்பாக, 3 பேரைக் கைது செய்தனர்.

ஈரோட்டில் ஒரே சமயத்தில், ஈவ் டீசிங் தொடர்பாக 9 பேரைப் போலீசார் கைது செய்திருப்பது இதுதான் முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஈவ் டீசிங் தொடர்பாக 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி, ஈரோட்டில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

குலசேகரத்தில் ஈவ் டீசிங் - ஒருவர் கைது

குலசேகரம்-பொன்மனை அருகே தீப்பாஞ்சான்காலை கிராமத்தைச் சேர்ந்த சபீதா (16) என்ற பெண்ணைக் கேலிசெய்து, மிரட்டிய கார்த்தி (19) என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X