ஈரோட்டில் ஈவ் டீசிங் - 9 பேர் கைது
ஈரோடு:
ஈவ் டீசிங் தொடர்பாக ஈரோட்டில் முதல் முறையாக 9 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், அந்தப் பெண் தன் தந்தையிடம் இதைக்கூறி அழுதுள்ளார். உடனே அப்பெண்ணின் தந்தை போலீசில்புகார் செய்தார்.
அவருடைய புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போலீசார், மற்றொரு ஈவ் டீசிங் தொடர்பாக, 3 பேரைக் கைது செய்தனர்.
ஈரோட்டில் ஒரே சமயத்தில், ஈவ் டீசிங் தொடர்பாக 9 பேரைப் போலீசார் கைது செய்திருப்பது இதுதான் முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஈவ் டீசிங் தொடர்பாக 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி, ஈரோட்டில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
குலசேகரத்தில் ஈவ் டீசிங் - ஒருவர் கைது
குலசேகரம்-பொன்மனை அருகே தீப்பாஞ்சான்காலை கிராமத்தைச் சேர்ந்த சபீதா (16) என்ற பெண்ணைக் கேலிசெய்து, மிரட்டிய கார்த்தி (19) என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.