For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தே.ஜ. கூட்டணியை விட்டு விலக மதிமுகவுக்கு மார்க். கம்யூனிஸ்டு கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஐ.பி.எஸ். அதிகாரிகள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வைகோ, இன்னும் ஏன் தேசியஜனநாயக் கூட்டணியில் நீடிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரையாகேள்வி எழுப்பினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.சங்கரையா இன்று (செவ்வாய்க்கிழமை)நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது கூறியதாவது:

தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைக்கும் விஷயத்தில், மத்திய அரசின்நடவடிக்கைகளை எதிர்ப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பிறகு ஏன் இவரது மதிமுக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் இருந்துகொண்டு, அமைச்சர் பதவிவகித்து வருகிறது. கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டியது தானே.

மதவாதத்திற்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொள்பவர் கருணாநிதி. ஆனால், அவர் மத்தியில் மதவாதபாரதீய ஜனதாவை ஆதரிப்பது, மாறன் மற்றும் பாலு ஆகியோரின் அமைச்சர் பதவிகளுக்காகத்தான்.

கோவில் பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்அமிர்தராஜ் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட்கட்சி மறியலில் ஈடுபடும் என்று சங்கரையா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X