எங்கே உள்ளது கோவில்?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகே உள்ள கம்பன் மணி மண்டப வளாகத்தின் தெற்கேஅமைந்துள்ளது தமிழ்த் தாய் கோவில்.
இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர்உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.
தமிழ்த் தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற சா. கணேசனின் கனவை நினைவாக்கும் வகையில், 1975ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் கால்கோள் விழா நடந்தது.கோவில் கட்டுமானப் பணிகளும் தொடங்கின.
சா. கணேசன் மற்றும் சிற்ப கலாசாகரம் என்று போற்றப்படும் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம்சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்தபதி ஆகியோர் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம்கொடுத்தனர். சிலை உருவானது.
கோவிலின் இறுதிக் கட்டப் பணிக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியை ஒதுக்கியது. அப்போதைய மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம் இந்த நிதியை மாநில அரசின் மூலம் வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் பணிகள் முற்றுப்பெற்று, 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி, அதாவது திருவள்ளுவர் தினத்தன்று,தமிழ்த் தாய்க் கோவில் திறக்கப் பெற்றது. கால்கோள் விழா நடத்திய கருணாநிதி கோவிலைத் திறந்து வைத்தார்.அன்று முதல் இக்கோவிலில் தமிழ் வழிபாடு நடந்து வருகிறது.
மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்
வழிபாட்டு முறைகள்
தமிழ்த் தாயின் தோற்றம்
வழிபாட்டு முறைகள்