வழிபாட்டு முறைகள்
தமிழ்த் தாயை வழிபடுவதற்கான சில முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
தமிழ்த் தாய் மீது, மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்து "தமிழ்த் தாய் பிரபந்தம்"என தமிழ்த் தாய் கோவில் திறப்பின்போது நூல் வெளியிடப்பட்டது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும்கோவிலில் ஓதுவார் இசைக்க வழிபாடு நடைபெறுகிறது.
தமிழ் நாட்டில் எங்குமில்லாத தமிழ்த் தாய்க் கோவிலை திரு. வெங்கா அவர்களின் தலைமையிலான கம்பன்அறநிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும்சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.
அடுத்த முறை காரைக்குடி போனால், இக்கோவிலுக்குச் சென்று, தமிழையும் தரிசித்து விட்டு வாருங்கள்.
சி. சிதம்பரம், எம்.ஏ., எம்.பில் (பி.எச்.டி),
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.
மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்
எங்கே உள்ளது கோவில்?
வழிபாட்டு முறைகள்
தமிழ்த் தாயின் தோற்றம்