அந்தியூரில் மேலும் ஒரு வீரப்பன் கூட்டாளி கைது
அந்தியூர்:
அந்தியூர் மலைப் பகுதியில் உளவுப்படையினரால் கைது செய்யப்பட்டவர் சந்தன வீரப்பன் கூட்டாளியா என்பதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
வீரப்பன் தினந்தோறும் இடத்தை மாற்றிக் கொண்டு இருப்பதால் வீரப்பன் இருக்கும் இடம் குறித்த சரியானதகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்தியூர் மலைப் பகுதியில் வீரப்பன் இருப்பதாக உளவுப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உளவுப் படையினர் திங்கள்கிழமை வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தியூர் அருகே உள்ள கொங்கமடை, சாமிமலை காட்டு பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில்ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உளவுப் படையினரை கண்டதும் அவர் தப்பி ஒட முயன்றார். அவரை உளவுப் படையினர் துரத்திச் சென்றுபிடித்தனர்.
அவர் பெயர் சென்னி நாடார் (வயது 50) என்பதும். அவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்ததாகவும்விசாரணையில் தெரியவந்தது.
ஆனாலும் அவர் விசாரணையின் போது முரணான தகவல்களை கூறிய காரணத்தால் அவரை பர்கூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் வீரப்பனின் கூட்டாளியாக இருக்கலாம் என்ற கோணத்திலும்விசாரணை நடந்து வருகிறது.